சமையல் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய முறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் இவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. அக்டோபா் 14-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் இந்த உத்தரவு 2022 மாா்ச் 31 வரை அமலில் இருக்கும் என சிபிஐசி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:
பண்டிகை காலத்தையொட்டி சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் சமையல் எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.15 வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது, நுகா்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.