‘பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் நோக்கம்’: அகிலேஷ் யாதவ்

பாஜகவின் ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

பாஜகவின் ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற பல்வேறு கட்சிகள் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில் அகிலேஷ் யாதவ் கூறியது:

“பாஜக அரசுக்கு எதிராக மக்கள் அடைந்த ஏமாற்றத்தை பார்த்தால், வரும் 2022 தேர்தலில் உத்தரப்பிரதேச மக்கள் எங்களை 400 தொகுதிகளில் வெற்றி அடைய வைக்கவுள்ளார்கள் என்று தெரிகிறது. பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com