காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ஆய்வாளரும் ராணுவ வீரரும் பலியாகியிருக்கிறார்கள்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நார்காஸ் வனப்பகுதியில் நேற்று(அக்-14) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்த பின் ராணுவ சிறப்பு படையினரும் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இன்று அவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பதாக ராணுவத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் இறந்தவர்களில் ஒருவர் ராணுவ இளநிலை ஆய்வாளர் ஆவார்.