இந்தியாவில் இதுவரை 97.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,05,162 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 97,79,47,783 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 39,31,57,500 இரண்டாம் தவணை - 11,07,36,109 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,77,59,306 இரண்டாம் தவணை - 8,60,28,053 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,57,36,587 இரண்டாம் தவணை - 6,11,94,047 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,75,864 இரண்டாம் தவணை - 90,77,901 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,61,949 இரண்டாம் தவணை - 1,55,20,467 |
மொத்தம் | 97,79,47,783 |