பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டாவின் தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவில் இன்று மேலும் 13,596 பேருக்கு கரோனா
இந்நிலையில், தேர்தல் குறித்த வியூகங்களை வகுக்க தேசிய நிர்வாகிகளின் கூட்டம் தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.
மேலும், இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூலில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.