உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகப்படியான கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | உத்தரகண்டில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளின் மூலம் 16 பேர் வரை பலியாகியிருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருக்கிறார். மேலும் நிலைமையின் தீவிரம் அறிந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உத்தரகண்டின் நிலை குறித்து தெரிந்து கொண்டார். மேலும் மாநிலத்திற்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப்பணி உதவிகளை விரைவாக வழங்குவதாகவும் மோடி உறுதியளித்திருக்கிறார்.