தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிலிருந்து கடத்திவரப்பட்ட 6.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
துபையிலிருந்து ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-19) வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது பேட்டரி விளக்கில் 6.06 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.97 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த அக்-6 ஆம் தேதி சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து ரூ.43 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கத்தை கடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.