இந்தியாவில் இதுவரை 99.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,36,142 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 99,12,82,283 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 39,73,05,720 இரண்டாம் தவணை - 11,57,29,771 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,88,22,731 இரண்டாம் தவணை - 8,76,73,217 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,62,77,396 இரண்டாம் தவணை - 6,20,54,229 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,76,101 இரண்டாம் தவணை - 90,98,715 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,62,683 இரண்டாம் தவணை - 1,55,81,720 |
மொத்தம் | 99,12,82,283 |