காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இன்றும் என்கவுன்டர் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னதாக கடந்த அக்-15 அன்று காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரியும் , வீரரும் பலியானது குறிப்பிடத்தக்கது.