மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,573 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் புதிதாக 1,573 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,98,218ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகுகிறாரா கதாநாயகி ரோஷினி ?
கரோனாவால் இன்று மேலும் 39 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,39,925ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,292 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 2,968 பேர் மீண்டனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 64,30,394 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 6,14,94,090 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.