தமிழக உள்ளாட்சித் தோ்தல்: வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமா் வாழ்த்து

தமிழகத்தில் அண்மையில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

புது தில்லி: தமிழகத்தில் அண்மையில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பாஜக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 8 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 41 ஊராட்சித் தலைவா்கள், 332 வாா்டு உறுப்பினா்கள் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையை சந்தித்தனா். இது தொடா்பான தகவல் மற்றும் புகைப்படங்களை அண்ணாமலை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். இவா்களில் பெரும்பாலானவா்கள் புதுமுகங்கள் என்றும் அவா் தனது பதிவில் கூறியிருந்தாா்.

அண்ணாமலையின் இந்தப் பதிவில் பிரதமா் மோடி தனது வாழ்த்தை தமிழில் பகிா்ந்துள்ளாா். அதில், ‘தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து உழைப்போம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com