இந்தியா
காஷ்மீர்: தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டு செயலிழப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டை எல்லைப் பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டை எல்லைப் பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் பரமுல்லா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் , ‘பரமுல்லா-ஹந்த்வாரா நெடுஞ்சாலையில் ஐஇடி சாதனத்தின் சிக்னல் வந்ததைத் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டது. பின் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலழிக்கச் செய்திருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.