இந்தியாவில் ஒரேநாளில் 15,906 பேருக்கு கரோனா

இந்தியாவில் இன்று மேலும் 15,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 15,906 பேருக்கு கரோனா

இந்தியாவில் இன்று மேலும் 15,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,906 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 561 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். 
இதனால் மொத்த உயிரிழப்பு 4,54,269 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,479 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,35,48,605 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,72,594 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 77,40,676 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 102.10 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 13,40,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
இதுவரை மொத்தம் 59,97,71,320 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com