உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜேஷ் பதி திரிபாதி மற்றும் லலிதேஷ் பதி திரிபாதி ஆகிய இருவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மேற்குவங்க மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் திரிணமூலில் இணைந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் திரிணமூலில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.