உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வரும் இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 24.36 கோடி பேர் பாதிப்பு
அதிகப்படியான காய்ச்சல் , உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்தவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த , பணியாற்றிய சக அதிகாரிகள் என 200 பேருக்கு மேல் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.