இமாச்சல் பிரதேசத்தின் மனாலியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 108 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக சில நாட்களுக்கு முன் தென்மேற்கு கிரீஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.