பாலாசோா்: அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் புதன்கிழமை இரவு 7.50 மணிக்கு செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிரிவு திடமான எரிசக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாகவும், இந்த ஏவுகணையை முதலில் இந்தியா பயன்படுத்தாது என்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.