மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் ஒருசில பகுதிகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாநிலங்களில் கரோனா பாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார்.