கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பள்ளிச் சிறுவர்களை புகைப்பிடிக்க வற்புறுத்திய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க | புதுவையில் நவ.8 முதல் 1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூருவில் உள்ள ஒயிட் ஹவுஸ் நகரில் அமைத்துள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்து விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவர்கள் சிலரை அங்கிருந்த கும்பல் ஒன்று கட்டாயப்படுத்தி புகைப்பிடிக்கச் சொல்லியும் , கட்டிவைத்து குச்சியால் அடித்துத் துன்புறுத்தும் காட்சியும் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
தலைதூக்கி வரும் போதைப்பொருள் கலாச்சாரமே இக்குற்றங்களை செய்யத் தூண்டுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.