மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாடேலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் திலீப் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கரோனா நோய்த் தொற்றின் அறிகுறி காரணமாக பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன்.
மேலும், நாக்பூர் மற்றும் அமராவதி சுற்றுப்பயணத்தின் போது என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”