கேரளத்தின் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.38 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | பெங்களூரு 3ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு விவரம்
நேற்று (அக்-27) சார்ஜாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 1.38கிலோ தங்கத்தை உருக்கி அணிந்திருந்த பெல்ட்டில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.67 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த அக்-19 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.