விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர்: பிரதமர் மோடி புகழாரம்

தேவர் ஜெயந்தி நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேவர் ஜெயந்தி நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “தேவர் ஜெயந்தி நன்னாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை நான் நினைவு கூர்கிறேன். துணிச்சல் மிக்க  மற்றும் கனிவான குணம் கொண்ட அவர், பொது நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் அவர்” என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com