நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அக். 31 காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 1,06,14,40,335 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 41,83,92,813 இரண்டாம் தவணை - 14,17,87,899 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,47,82,442 இரண்டாம் தவணை - 9,62,71,341 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,96,95,172 இரண்டாம் தவணை - 6,66,10,264 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,79,018 இரண்டாம் தவணை - 92,21,867 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,71,653 இரண்டாம் தவணை - 1,59,27,866 |
மொத்தம் | 1,06,14,40,335 |