உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மாவட்டங்களில் புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது:
"கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 மாவட்டங்களிலிருந்து 26 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 250 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 0.01 சதவிகிதமாகியுள்ளது.
இதையும் படிக்க | ரஷியாவில் புதிதாக 18,780 பேருக்கு கரோனா
ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 98.7 சதவிகிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்."