ஆகஸ்ட் மாதத்தில், ஜி 7 நாடுகள் கூட்டாக செலுத்திய தடுப்பூசியை காட்டிலும் இந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமான MyGovIndia-இல் வெளியிடப்பட்ட பதிவில், "ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் 18 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ஜி 7 நாடுகள் சொலுத்திய மொத்த தடுப்பூசிகளை காட்டிலும் அதிகம்.
ஜி 7 நாடுகளை பொறுத்தவரையில், கனடாவில் குறைந்தபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகளும் அதிகபட்சமாக ஜப்பானில் 4 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு சாதனை. உலகளவில் தடுப்பூசி விநியோகத்தில் முன்னிலை இந்தியா வகித்துள்ளது" என பதிவிட்டுள்ளது.
இதுவரை, இந்தியாவில் 68.46 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.