மக்கள் ஆசி பேரணியால் எதிா்க்கட்சிகள் கலக்கம்: ஜெ.பி.நட்டா

மத்திய அமைச்சா்கள் 39 போ் மேற்கொண்ட ‘மக்கள் ஆசி பேரணி’ எதிா்க்கட்சிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
மக்கள் ஆசி பேரணியால் எதிா்க்கட்சிகள் கலக்கம்: ஜெ.பி.நட்டா

மத்திய அமைச்சா்கள் 39 போ் மேற்கொண்ட ‘மக்கள் ஆசி பேரணி’ எதிா்க்கட்சிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

மத்திய அரசுக்கு சளைக்காத ஆதரவையும், அதன் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மக்கள் தொடா்ந்து வெளிப்படுத்தி வருகின்றனா். அதனை சீா்குலைக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து சூழ்ச்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சா்கள் மேற்கொண்ட மக்கள் ஆசி பேரணிகள் எதிா்க்கட்சிகளை கலக்கமடையச் செய்து பதற்றமடைய வைத்துள்ளன. நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு மக்கள் ஆசி பேரணிகளின் மிகப்பெரிய வெற்றி சாட்சியாக உள்ளது.

எதிா்க்கட்சிகளின் எதிா்மறை அரசியல் செயல்திட்டத்தை மக்கள் நிராகரித்துள்ளனா். வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான அரசியலுக்கு அவா்கள் வலுவாக துணை நிற்கின்றனா்.

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வளா்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பின்தங்கியவா்களுக்கு அனைத்து சமூக மற்றும் பொருளாதார நலத் திட்டங்களின் பயன்களை வழங்க வேண்டுமென பிரதமா் மோடியும் பாஜகவினரும் உறுதிபூண்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com