கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 25,772 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அந்த மாநிலத்தில் புதிதாக 25,772 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27,320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 189 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலி
கேரளத்தில் இதுவரை மொத்தம் 39,93,877 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 21,820 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி கேரளத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,37,045 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.