நாட்டில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 338 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 40,567 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,23,04,618 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 338 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4,41,749-ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,93,614-ஆக உள்ளது. 

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 71,65,97,428 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,51,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com