புது தில்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக 1976-கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான ரவீந்திர நாராயண ரவியை (69) குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை நியமித்தாா்.
தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல், உத்தரகண்ட் ஆளுநராக ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தளபதி குா்மீத் சிங்கும், அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநா் ஜெகதீஷ் முகிக்கு நாகாலாந்து மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-இல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக ரவீந்திர நாராயண ரவி ஓய்வு பெற்றாா். அதன்பின்னா் 2019-இல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றாா் .
நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவாா்த்தையில் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.