பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா திப்ரூவல், ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தோ்தலுக்கு முன்பு, தோ்தலுக்குப் பின்பும் இரு கட்சியினரிடையே பல்வேறு மோதல்களும், வன்முறைகளும் நிகழ்ந்தன.
தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தபோதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தார்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
இருப்பினும் மம்தா முதல்வராகப் பதவியேற்றதால், அவா் 6 மாதங்களில் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மம்தா முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது.