மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் துணை குடியரசுத் தலைவர்!

இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்த இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு வரவேற்பு அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் என். ரங்கசாமி, பேரவைத் தலைவர், அமைச்சர்கள்.
புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்த இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு வரவேற்பு அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் என். ரங்கசாமி, பேரவைத் தலைவர், அமைச்சர்கள்.


இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

ஹெலிகாப்டரில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் என். ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

லாசுப்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கார் மூலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com