பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பரமோத் குஷ்வஹா கூறியது:
“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடமிருந்து வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.”