மகாராஷ்டிரத்தில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் போய்சார் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவர் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. மருத்துவர் இதனை உறுதி செய்ததை அடுத்து, சிறுமியிடம் கேட்டதற்கு அவர் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் 12 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 376 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.