வேட்புமனுவில் குளறுபடி செய்ததாக மம்தா மீது பாஜக புகார்

மேற்கு வங்கத்திலுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
வேட்புமனுவில் குளறுபடி செய்ததாக மம்தா மீது பாஜக புகார்
வேட்புமனுவில் குளறுபடி செய்ததாக மம்தா மீது பாஜக புகார்

மேற்கு வங்கத்திலுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வராக மம்தா  பதவியேற்றுக் கொண்டார். எனினும் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நவம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டாயம் எம்எல்ஏவாக வேண்டும்.

இந்நிலையில், அந்த மாநிலத்திலுள்ள 3 தொகுதிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை அவர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் பதியப்பட்டுள்ள தன்மீதான குற்றவியல் வழக்கை குறிப்பிடவில்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் இதுதொடர்பாக பாஜக வேட்பாளரான பிரியங்கா திப்ரிவால் புகார் மனு அளித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக பதிலளித்துள்ள திரிணமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செளகடா ராய், இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் பாஜக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com