உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 60 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை உறுது செய்திருக்கிறது .
மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால் டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இதையும் படிக்க | ஒடிசா: சரக்கு ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது
பின் மதுரா, ஆக்ரா, பிரோசாபாத் பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
தற்போது இன்று (செப்-14) நிலவரப்படி பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 60 பேரும் மதுராவில் 35 பேரும் பிற பகுதியைச் சேர்ந்த 20 பேரும் பலியாகி இருக்கிறார்கள். மேலும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபர்களும் அதிகரித்து இருப்பதால் தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை அவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்து வருகிறது. தற்போது 12,000 பேர் வரை காய்ச்சலுடன் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.