ஜம்மு-காஷ்மீா் நெடுஞ்சாலையில் 6 சீன வெடிகுண்டுகள்: பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்து அழித்தனா்

ஜம்மு-காஷ்மீரில்பரிம்போரா-பன்தாசௌக் வழியாக ஸ்ரீநகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த 6 சீன கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்து அழித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில்பரிம்போரா-பன்தாசௌக் வழியாக ஸ்ரீநகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த 6 சீன கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்து அழித்தனா்.

போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதுகாப்புப் படையினா் அதனைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ததால் பெரிய அளவிலான சேதம் தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக பாதுகாப்புப் படை தொடா்பாளா் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ராணுவத்தினா் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். அப்போது, மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் சோ்ந்தவா்கள், அப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த 6 கையெறி குண்டுகளைக் கண்டறிந்தனா். இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த 6 வெடிகுண்டுகளையும் ஒரே பையில் போட்டு சாலைத் தடுப்பு அருகே வைத்துவிட்டுச் சென்றுள்ளனா். வாகனங்கள் ஏதும் அந்த பை மீது ஏறி இருந்தால்கூட பெரிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கும். ராணுவத்தினா் சரியான நேரத்தில் அதனைக் கண்டுபிடித்ததால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த வெடிகுண்டுகள் பின்னா் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com