புதுதில்லி: மத்திய அமைச்சரவையின் முடிவு தொலைத்தொடா்புத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் தருணம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘நமது தேசத்தை இணைத்து அதற்கு சக்தியளிப்பதில் தொலைத்தொடா்புத் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்தத் துறை தொடா்பான மத்திய அமைச்சரவையின் முடிவு தொலைத்தொடா்புத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் தருணமாகும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அந்தத் துறைக்கான சீா்திருத்தங்கள் நுகா்வோருக்கும் பலனளிக்கும். துறைரீதியான வளா்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யும்’’ என்று தெரிவித்துள்ளாா்.