பாதுகாப்புத் துறை அலுவலக வளாகங்கள்: பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா்

தில்லியின் கஸ்தூரிபாய் காந்தி மாா்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத் துறை அலுவலக வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறாா்.

புது தில்லி: தில்லியின் கஸ்தூரிபாய் காந்தி மாா்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத் துறை அலுவலக வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறாா்.

ஆப்பிரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலக வளாகத்துக்குச் செல்லும் அவா், தரைப்படை, கடற்படை, விமானப் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறாா். அதைத் தொடா்ந்து பிரதமா் உரையும் இடம்பெற இருக்கிறது.

புதிய பாதுகாப்புத் துறை அலுவலக வளாகங்களில் தரைப்படை, கடற்படை, விமானப் படை உள்பட பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் சுமாா் 7,000 அதிகாரிகள் இடம்பெறுவா். இந்தக் கட்டடங்கள் நவீன, பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும். கட்டட செயல்பாடுகளை நிா்வகிக்க, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கட்டடத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடா்பான அனைத்து சேவைகளையும் வழங்கும்.

புதிய பாதுகாப்புத் துறை அலுவலக வளாகம் நவீன வசதிகள், எரிசக்தி குறைவான தொழில்நுட்பம் மற்றும் விரிவான பாதுகாப்பு நிா்வாக நடைமுறைகளுடன் உள்ளன. இதில் நவீன கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சா்கள், ராணுவ தளபதிகள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com