புது தில்லி: தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
மதியம் 1.40 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 2.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.