நடிகர் சோனு சூட் ரூ.20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு

பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 
நடிகர் சோனு சூட் ரூ.20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு

பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மும்பையில் உள்ள பிரபல நடிகர் மற்றும் லக்னோவை அடிப்படையாகக் கொண்டு உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழில்துறை குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மும்பை, லக்னௌ, கான்பூர், ஜெய்ப்பூர், தில்லி மற்றும் குர்காவ்ன் உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடைப்பெற்றது.
நடிகர் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது வரிஏய்ப்பு தொடர்பான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, போலி நிறுவனங்களிடமிருந்து போலியான பாதுகாப்பற்ற கடன்களாக நடிகர் மாற்றியிருப்பது சோதனையின்போது தெரியவந்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இதுபோன்ற 20 உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

போலி விடுதி உள்ளீடுகளை வழங்கியதாக சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர். முதலீடுகள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு போலி கடன்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. 20 கோடிக்கும் அதிகமான தொகை வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. நடிகரால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள ரூ. 18.94 கோடி நன்கொடையில் ரூ. 1.9 கோடி, பல்வேறு நிவாரணப் பணிகளுக்காக செலவு செய்யப்பட்டிருப்பதும், எஞ்சியுள்ள ரூ. 17 கோடி இதுவரை பயன்படுத்தப்படாமல் வங்கிக் கணக்கில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக வெளிநாட்டில் வசிக்கும் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 2.1 கோடி சேகரிக்கப்பட்டிருப்பதும் சோதனையின்போது தெரியவந்தது.
ரியல் எஸ்டேட் திட்டத்தில் கூட்டாளியாக இணைந்து கணிசமான தொகையை நடிகர் முதலீடு செய்துள்ள லக்னெவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும், கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்தது.
தேடுதலின் போது ரூ. 1.8 கோடி மதிப்பிலான ரொக்கம் கைப்பற்றப்பட்டதோடு, 11 லாக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கைகளும், கூடுதல் விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகா் சோனு சூட்டுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தீவிர சோதனை அதிகாரிகள் நடத்தினா். 
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் சோனு சூட் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடா்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்ாக புகாா் தெரிவிக்கப்பட்டது. 
இந்தப் புகாரைத் தொடா்ந்து, லக்னெளவில் உள்ள நடிகருக்கு தொடா்புடைய 6 இடங்களிலும், மும்பையில் சில இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து வியாழக்கிழமையும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். 
இந்த நிலையில், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை தொடா்ந்தது. மும்பையில் சோனு சூட்டுக்குத் தொடா்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினா் தீவிர சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப உதவியதன் மூலம் சோனு சூட் தேசிய அளவில் கனவம் பெற்றாா். அதனைத் தொடா்ந்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு, மாணவா்களுக்காக அறிமுகம் செய்த ‘தேசத்துக்கான வழிகாட்டிகள்’ என்ற வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் திட்டத்துக்கு நடிகா் சோனு சூட்டை பிரசார தூதராக அண்மையில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com