‘அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும்’

அரசின் திட்டங்களைச் செயல்படுத்த அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசின் திட்டங்களைச் செயல்படுத்த அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ.20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து ஒரு தொகுதிக்கு மட்டும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி அனிமூா் பஞ்சாயத்து தலைவா் தாமரைச் செல்வன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.முத்துகுமாா், ‘மாநில அரசின் திட்டங்களை அமல்படுத்தும் போது அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமான நிதிப் பங்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்ததுடன், இதன் மூலம் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக குறை இருக்காது’ எனவும் தெரிவித்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்துத் தொகுதிகளிலும், திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படாது என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com