இந்தியாவில் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 80,85,68,144(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 32,70,72,826 இரண்டாம் தவணை - 6,01,11,629 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,09,55,764 இரண்டாம் தவணை - 6,91,16,028 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,69,24,214 இரண்டாம் தவணை - 5,24,39,671 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,68,967 இரண்டாம் தவணை - 87,29,932 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,45,002 இரண்டாம் தவணை - 1,45,04,111 |
மொத்தம் | 80,85,68,144 |