கேரளத்தில் வருகிற நவம்பர்-1 ஆம் தேதியிலிருந்து 1-7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.
இதையும் படிக்க | துறைமுகப் பணிகள்: தமிழகத்திடம் உதவி கோருகிறது கேரளம்
நாட்டிலேயே கரோனாவின் தீவிரம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் 1-7 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருகிறது.
மேலும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் - 15 முதல் பள்ளிகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பள்ளியிலேயே மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.