தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
இதையும் படிக்க | கனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகும் ஜஸ்டீன் ட்ரூடோ
நாடு முழுவதும் கரோனாவின் அலை மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இதனால் முக்கியமாக சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.