தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.04 சதவீதம் என தில்லி சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,
தில்லியில் புதன்கிழமை புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தொற்று நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது.
கரோனாவுக்கு தற்போது தில்லியில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 411ஆக உள்ளது. மேலும் இதுவரை கரோனாவால் 25,085 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,38,586 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 14,13,090 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.