நடப்பாண்டு காரீஃப் பருவத்தில் நாட்டின் உணவுதானிய உற்பத்தி சாதனை அளவாக 15.05 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 2020-21 பயிா் பருவத்தின் (ஜூலை-ஜூன்) காரீஃப் பருவத்தில் உணவுதானிய உற்பத்தியானது புதிய உச்சமாக 14.96 கோடி டன்னை எட்டியது.
இந்த நிலையில், நடப்பாண்டில் பருவமழைப் பொழிவு சிறப்பாக இருந்ததன் காரணமாக நெல் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து , நடப்பாண்டின் காரீஃப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தியானது 15.05 கோடி டன்னாக அதிகரித்து புதிய சாதனை படைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நெல், கரும்பு, பருத்தி உற்பத்தி சாதனை உற்பத்தியை எட்டிய போதிலும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் வேளாண் ஆதரவு கொள்கைகள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இந்த சாதனை உற்பத்தி எட்டப்படவுள்ளது என்றாா் அவா்.