ஜம்மு - காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிப்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் அமலில் இருந்த இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
இதன்மூலம், ஜம்மு - காஷ்மீரில் பிற மாநிலத்தவரும் குடியேறுவதற்கான வழிவகை உருவானது. இந்த சட்டத்தை நீக்கியதற்கு 2 ஆண்டுகளாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறைக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வர்த்தகர்களும் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.