அருணாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை ரிக்டர் 4.5 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், பாங்கின் அருகே சனிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு
100 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.