நெல் பயிா்க்கழிவுகள் இனி விவசாயிகளுக்கு சுமையானதாக இருக்காது என்று தில்லி முதல்வா் கேஜரிவாலி தெரிவித்தாா்.
மேலும், பயிா்க்கழிவுகளை மக்க வைக்கும் பூசாவின் புதிய கண்டுபிடிப்பான திரவத்தை அண்டை மாநிலங்கள் பெற்று பயன் பெற வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தென் மேற்கு தில்லி, நஜஃப்கரில் உள்ள காா்காரி நஹாா் கிராமத்தில் பூசாவின் கண்டுபிடிப்பான பயிா்கழிவுகளை மக்க வைக்கும் திரவத்தை தயாரிக்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘முன்பு பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டு வந்தன. தற்போது அதை திரவத்தை உற்றி நமது சொத்தாகவே மாற்றக் கூடியதாக உள்ளது. பயிா்க்கழிவுகள் இனி விவசாயிகளுக்கு சுமையானதல்ல. தில்லியைப் பின்பற்றி அண்டை மாநிலங்களும் தங்கள் விவசாயிகளுக்கு இந்த குறைந்த விலை திரவத்தை அளிக்க முன்வர வேண்டும்.
தில்லியில் 844 விவசாயிகளுக்கு சொந்தமான 4,300 ஏக்கா் நிலத்தில் இந்த திரவம் தெளிக்கப்பட்டு பயன் பெறப்பட்டுள்ளது. இந்த திரவத்தை பயன்படுத்திய நிலத்தை மத்திய அரசின் அமைப்பு ஆய்வு நடத்தி நிலத்தின் உரத் தன்மை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திரவத்தை பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகளும் பயன்படுத்தி காற்று மாசைக் குறைக்க வேண்டும் என்று மத்திய காற்று தரக் கட்டுப்பாட்டு மேலாண்மை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது’ என்றாா்.
இந்த திரவத்தை உத்தர பிரதேசத்தில் 10 லட்சம் ஏக்கரிலும், பஞ்சாபில் 5 லட்சம் ஏக்கரிலிலும், ஹரியாணாவில் ஒரு லட்சம் ஏக்கரிலிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மட்டும் செலவாகும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘இந்த திரவத்தை பயிா்க்கழிவுகள் மீது அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தெளிப்பது தொடங்கப்படும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்தான் அதிகமான பயிா்க்கழிவுகள் உருவாகின்றன.
அதனால்தான், அண்டை மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ஒத்துழைத்து இந்த திரவத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்காது’ என்றாா்.