இந்தியா
பிரதமா் மோடியின் உரை: இன்று 120 நாடுகளில் ஒளிபரப்பு
‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி உரையாற்றவுள்ளாா்.
‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி உரையாற்றவுள்ளாா். உலகெங்கும் உள்ள 120 நாடுகளில் பல்வேறு சமூகவலை தளங்களின் வாயிலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது.
அதீத ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க பணியாற்றும் சா்வதேச அமைப்பாக குளோபல் சிட்டிசன் திகழ்கிறது. இந்த அமைப்பு சாா்பில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.24,25) 24 மணி நேரம் நடைபெறவிருக்கும் ‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியின் போது மும்பை, நியூயாா்க், பாரிஸ், ரியோ டி ஜெனிரோ, சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாகோஸ் மற்றும் சியோல் நகரங்களில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி சனிக்கிழமை பங்கேற்று காணொலி முறையில் உரையாற்ற இருக்கிறாா். அவரது உரை 120 நாடுகளில் வெவ்வேறு தளங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.